Friday 26 February 2016

பைரவர் தரிசனம் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும்:-

திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். மேலும் அன்று ஒன்பது முறை அர்ச்சித்து, தயிர் அன்னம், தேங்காய், தேன் சமர்ப்பித்து வழிபட்டால் வியாபாரம் செழித்து வளரும், வழக்கில் வெற்றி கிட்டும். * திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லி மலர் சூட்டி, புனுகு சந்நி, பாகற்காய் கலந்து சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும். * செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம் பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும். * புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய மாணவர்கள் கல்வியில் சிறந்த விளங்கலாம். தடையின்றி விரும்பிய கல்வியை கற்று முதலிடம் பெறலாம். * தேய்பிறை அஷ்டமி அன்று அல்லது வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால், பாயம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். * வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரை பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். * சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால், பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும். மேலும் படிக்க:http://goo.gl/G1qxNO

இன்றைய ராசிபலன்கள் (27-2-2016)

சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/AfD2mV

இன்றைய நாள் எப்படி? 27.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

இன்று! மன்மத வருடம், மாசி மாதம் 15ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 18ம் தேதி. 27.2.16 சனிக்கிழமை, தேய்பிறை.சதுர்த்தி திதி காலை 7:42 மணி வரை, அதன்பின் பஞ்சமி திதி. சித்திரை நட்சத்திரம் மாலை 5:19 மணி வரை, அதன் பின் சுவாதி நட்சத்திரம், மரணயோகம், அமிர்தயோகம். மேலும் படிக்க:http://goo.gl/Q2UA7J

Sunday 21 February 2016

இன்றைய நாள் எப்படி? 22.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

இன்று ! *மன்மத வருடம், மாசி மாதம் 10ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 13ம் தேதி. *22.2.16 திங்கட்கிழமை, வளர்பிறை.பவுர்ணமி திதி இரவு 12:27 வரை, மகம் நட்சத்திரம் நாள் முழுவதும், மரணயோகம். மேலும் படிக்க :http://goo.gl/dJK6wH

இன்றைய ராசிபலன்கள் (22-2-2016)

திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/n0OcS0

Friday 19 February 2016

இன்று சனிப் பிரதோஷம்:

சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவதில் என்ன சிறப்புகள் என்பதை பார்ப்போம். பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 ம் நாள் ) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் பரமசிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை. பிரதோஷம் என்றால் என்ன? சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது இந்தப் பிரதோஷ நேரத்தில் தான். தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது. சிவபெருமான் கைலாயத்தில் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் திருநடம் புரிந்து காட்சியளிக்கிறார். அப்பொழுது கலைமகள் வீணை வாசிக்க, அலை மகளான லட்சுமி தேவி பாடுகிறாள், திருமால் மிருதங்கம் வாசிக்க இந்திரன் புல்லாங்குழல் ஊதுகிறார். பிரம்மதேவர் தாளமிட தேவர்கள் முனிவர்கள் யாவரும் கைலாயம் வந்து இறைவனை வணங்குகிறார்கள் என்பது புராதன வரலாறு. ஒவ்வொரு மாதமும் அமாவசைக்குப் பின், பௌர்ணமிக்குப் பின் என்று இரண்டு பிரதோஷ நாட்களிலும் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்குப் பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும். இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெறும். இவருக்கு எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம். பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். அதற்கடுத்தப்படியாக வாகனத்திற்கு மரியாதை தரக்கூடிய வழிபாடு பிரதோஷம் ஆகும். சிவனின் வாகனமான நந்தி பகவானுக்கும் மரியாதை செய்யக் கூடியது பிரதோஷ வழிபாடு. நான்கு வேதங்கள், 64 கலைகள் என அனைத்தையும் படித்து முடித்தவர் நந்தீஸ்வரர். சிவனின் சந்தேகங்களுக்கு விளக்கமளிப்பவரும் நந்தி பகவான் என்று ஐதீகம் கூறுகிறது. எனவேதான் அவருக்கு அனைத்து வேதங்களும், இதிகாசங்களும் தெரியும் என்று கூறப்படுகிறது.மெத்தப் படித்திருந்தாலும் நந்தி பகவான் மிகவும் அடக்கமானவர். சிவன் கோயில்களில் அவர் அமர்ந்திருக்கும் தன்மையே இதனை உணர்த்தும் விதமாக இருக்கிறது. அனைத்தையும் கற்றறிந்த பின்னர் அதனை மனதில் அசைபோடும் வகையில் அவர் அமர்ந்திருப்பது போல் தோன்றும். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் நீங்கி நன்மையுண்டாகும். இனி பிரதோஷ விரதமிருப்பது பற்றிப் பார்ப்போம். இந்த நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும். எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் "சனிப் பிரதோஷம்" என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் "மஹாப் பிரதோஷம்" என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை. பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை அனைவரும் வணங்குகின்றனர். இந்த இடத்தில் “அனைவரும்” என்பது மனிதர்களை மட்டும் குறிக்கவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோரையும் குறிக்கும். அந்த நேரத்தில் சிவனும் ஷேம நலத்திற்காக வழிபாட்டில் ஈடுபடுவார் என்பது ஐதீகம். எனவே, அனைத்து தரப்பினரும் வழிபாடு செய்யும் நேரத்தில், நாமும் பிரார்த்தனை செய்தால், இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான நலன்களை வழங்குவார் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இன்றைய நாள் எப்படி? 20.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

இன்று ! *மன்மத வருடம், மாசி மாதம் 8ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 11ம் தேதி *20.2.16 சனிக்கிழமை, வளர்பிறை திரயோதசி திதி இரவு 11:15 வரை, பூசம் நட்சத்திரம், மேலும் படிக்க:http://goo.gl/jDNEP1

Thursday 18 February 2016

இன்றைய நாள் எப்படி? 19.02.2016 தமிழ் பஞ்சாங்கம்

இன்று! மன்மத வருடம் மாசி மாதம் 7ம்தேதி, ஜமாதுல் அவ்வல் 10ம் தேதி 19.2.16 வெள்ளிக்கிழமை, வளர்பிறை துவாதசி திதி இரவு 11:21 வரை; புனர்பூச நட்சத்திரம், சித்த, மரணயோகம் மேலும் படிக்க:http://goo.gl/3noIvr

இன்றைய ராசிபலன்கள் (19-2-2016)

வெள்ளிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/eZm5Ue

Wednesday 17 February 2016

இன்றைய ராசிபலன்கள் (18-2-2016)

இன்றைய ராசிபலன்கள் (18-2-2016) வியாழக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/Cf6NTI

Sunday 17 January 2016

ராகு கேது தோஷம் உள்ளவர்கள் தோஷம்

நீங்க செய்யவேண்டிய அரிதான பரிகாரங்கள்.. [Raagu kethu dhosam neenga pariharangal] * தங்கம் அல்லது வெள்ளியில் செய்த பாம்பு வடிவத்தை செவ்வாயன்று இரும்பு பாத்திரத்தில் வைத்து தட்சிணையுடன் தானம் செய்வது. * ஆலயத்தில் வெள்ளிக்கிழமையன்று துர்கைக்கு நலெண்ணை அபிஷேகம் 21 உளுந்து வடை, உளுந்து சாதம் நைவேத்யம் செய்வது. * மஹா விஷ்ணுவிற்கு பக்தியுடன் அபிஷேகம் அர்ச்சனை செய்தல்.சக்கரை பொங்கல் நைவேத்யம், பாராயணம் விஷ்ணு ஸ்தோத்ரம் செய்தல்rahu ketu dosham in tamil, rahu ketu dosham pariharam, rahu ketu dosham effects * தன்னை விட வயதில் மூத்த ஏழு சுமங்கலி பெண்களை வீட்டிற்கு வர சொல்லி நல்ல எண்ணை தேய்த்து ஸ்நானம் பண்ண சொல்லி ஆடை ஆபரணங்கள் கொடுத்து அறுசுவை உணவளித்து.அவர்களை ப்ராஹ்மி, கெளமாரி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, இந்த்ராணி, சாமுண்டா என்பதான 7 மாத்ருக்களாக பாவித்து பூஜை செய்து ஆசி பெறுதல். * தன் கைப்பட எட்டு கையுடன் கூடிய துர்கை படம் பட்டு துணியில் வரைந்து தினசரி விடாமல் முப்பது நாட்கள் பூஜை செய்து தானம் செய்தல். * ஒரு பட்டு துணியில் எட்டு இதழ்களுடன் கூடியதான தாமரையை வரைந்து அதன் தளங்களில் ப்ராஹ்மி, கெளமாரி, மாஹேஸ்வரி, வைஷ்ணவி, வாராஹி, இந்த்ராணீ, சாமுண்டா, என்ற பெயர்களை எழுதவும் .எட்டாவது இதழில் உங்கள் நக்ஷத்திரத்தை எழுதவும். விடாமல் தொடர்ந்து 45 நாட்கள் பூஜை செய்யவும். நைவேத்யம் , உளுந்து சாதம்,எள்ளு சாதம் தேன். தினமும் படைத்து மனதால் ராகு, கேதுவை வணங்கவும் * தேவி மாஹாத்மியம் புத்தகம் வாங்கவும். தொடர்ந்து 45 நாட்கள் பாராயணம் செய்யவும். முதலில் தேன், கடைசியில் பால் நைவேத்யம் செய்யவும். 45 நாட்கள் கழித்து இந்த புத்தகத்தை தானம் செய்யவும். * தொடர்ந்து ஆறு சனிக்கிழமைகளில் தேங்காய் சாதத்தில் வெல்லம் சேர்த்து விநாயகர் ஆலயத்தில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம். * நுனியுள்ள தர்பத்தை கையில் வைத்துக்கொண்டு ஆலயம் அல்லது கன்றுடன் கூடிய பசு மாடு அல்லது மஹான்கள் வசிக்குமிடம் ஆகியவற்றை தொடர்ந்து ஒரு மாதம் வறை தினசரி பத்து முறை சுற்றி வந்து பிரதட்சிணம் செய்தல். * தொடர்ந்து 24 வாரங்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில் விஷ்ணு சன்னதியில் தினமும் காலை, மதியம், மாலை என மூன்று வேளைகள் புருஷ சூக்தம் பாராயணம் செய்தல். இவற்றை தொடர்ந்து செய்யும்போது ராகு கேது ஸஞ்சாரத்தால் ஏற்படும் அனைத்து விதமான தோஷங்கள் நீங்கி பற்பல நன்மைகள் கிடைக்க செய்யும். source :maalaimalar மேலும் படிக்க:http://goo.gl/NDDmgn

இன்றைய நாள் எப்படி? 18.01.2016 தமிழ் பஞ்சாங்கம்

இன்று ! *மன்மத வருடம், தை மாதம் 4ம் தேதி, ரபியுல் ஆகிர் 7ம் தேதி. *18.1.16 திங்கட்கிழமை, வளர்பிறை.நவமி திதி மதியம் 3:17 வரை, அதன்பின் தசமி திதி. பரணி நட்சத்திரம் இரவு 11:58 வரை, சித்தயோகம் மேலும் படிக்க:http://goo.gl/vB6cmb

சத்ருக்களை விலக்கும் வழிபாடு

இன்றைய ராசிபலன்கள் (18-1-2016)

இன்றைய ராசிபலன்கள் (18-1-2016) திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/SDeH9S

Thursday 14 January 2016

இன்றைய நாள் எப்படி? 15.01.2016 தமிழ் பஞ்சாங்கம்

*மன்மத ஆண்டு தை மாதம் 01ம் தேதி, ரபியுல்ஆகிர் 04ம் தேதி *15.1.16 வெள்ளிக்கிழமை, வளர்பிறை சஷ்டி திதி இரவு 10.09 வரை; அதன்பின் சப்தமி திதி, உத்திராட்டாதி நட்சத்திரம் காலை 04.43 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/vQVutc

இன்றைய ராசிபலன்கள் (15-1-2016)

வெள்ளிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/EQ2uUR

Wednesday 13 January 2016

இன்றைய ராசிபலன்கள் (14-1-2016)

வியாழக்கிழமை, மேலும் படிக்க :http://goo.gl/7WUXyf

இனிய போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்

பழையவை கழிதலும் புதியன புகுதலும்... இந்த ஆண்டில் உள்ள கேட்ட குணங்களோ , மூட நம்பிக்கையோ, குடிப் பழக்கமோ, புகைக்கும் பழக்கமோ …மறந்து / மறைந்து … புதிய ஆண்டில் ஒரு நல்லணாகவோ அல்லது நல்லவளாகவோ மாறவேண்டும் என்பது தான் போகி பண்டிகையை கொண்டாடும் திருநாள். இணைய குழுவின் போகி பண்டிகை திருநாள் வாழ்த்துக்கள்.

இன்றைய நாள் எப்படி? 14.01.2016 தமிழ் பஞ்சாங்கம்

இன்று ! *மன்மத ஆண்டு மார்கழி மாதம் 29ம் தேதி, ரபியுல்ஆகிர் 3ம் தேதி *14.1.16 வியாழக்கிழமை, வளர்பிறை பஞ்சமி திதி இரவு 12:31 வரை; அதன்பின் சஷ்டி திதி, சதய நட்சத்திரம் காலை 7:47 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம் நாள் முழுவதும் மேலும் படிக்க :http://goo.gl/XFW5Mj

Tuesday 12 January 2016

இயற்கை பரிகாரம்

இன்றைய நவீன காலகட்டத்தில் வாழும் மக்களுக்கு ஏற்றார் போல், இந்த உலகில் எல்லா இடங்களிலும் கட்டிடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவிட்டன. அக்கட்டிடங்கள் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இல்லாவிடில், அங்கு நிம்மதியற்ற வாழ்வு ஏற்படும், நாம் நமது பிரச்சனையிலிருந்து வெளிவர முயலும்போது அதற்கு ஒரு தீர்வு வரும். அதே போல், வாஸ்து விதிகளின்படி ஒரு வீடோ / வியாபார ஸ்தலமோ அமைக்கப்படவில்லையென்றால். அதற்கான தீர்வு பணத்தினால் வாங்கப்படும் பரிகாரப்பொருட்களில் இல்லை. வாஸ்துவில் என்றுமே தீர்வுகள்(பரிகாரங்கள்) இயற்கை தரக்கூடியதாகவே இருக்கும். இயற்கையால் உண்டாகின்ற தீர்வு ஒன்று மட்டுமே மனித இனத்திற்கு என்றுமே வெற்றி வாழ்விற்கு துணை செய்யும் வாஸ்துவில் யந்திரங்களுக்கும், மந்திரங்களுக்கும் வேலை இல்லை. வாஸ்து குறைபாடுகள் உள்ள வீடுகளிலும், தொழிற்சாலைகளிலும் இயற்கையான பரிகாரம் என்பது மேலும் அறிய:http://goo.gl/CTrnDi

இன்றைய ராசிபலன்கள் (13-1-2016)

புதன்கிழமை மேலும் அறிய:http://goo.gl/S78MCo

இன்றைய நாள் எப்படி? 13.01.2016 தமிழ் பஞ்சாங்கம்

இன்று ! *மன்மத ஆண்டு மார்கழி மாதம் 28ம் தேதி, ரபியுல்ஆகிர் 2ம் தேதி *13.1.16 புதன்கிழமை, வளர்பிறை சதுர்த்தி திதி இரவு 2:38 வரை,அவிட்டம் நட்சத்திரம் காலை 9:04 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம் மேலும் அறிய:http://goo.gl/tKr5q2

Monday 11 January 2016

இன்றைய ராசிபலன்கள் (12-1-2016)

இன்றைய ராசிபலன்கள் (12-1-2016) செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/4qLfYU

நீதி கிடைக்க தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம்

ஸ்ரீகாலபைரவாஷ்டகம் சகல செல்வங்களும் பெற தினமும் ஜபிக்க வேண்டிய கால பைரவ மந்திரம் மேலும் அறிய:http://goo.gl/IhN12j

Sunday 10 January 2016

தியான பாடல்

தியான பாடல் (தமிழ்).. "சங்கடந் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றிச் சாகா நெறியில் இச்செகம் வாழ இன்னருள் தருவாய் போற்றி" மேலும் படிக்க:http://goo.gl/I3lPnw

இன்றைய ராசிபலன்கள் (11-1-2016)

திங்கட்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/swztRc

Friday 8 January 2016

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசிபலன்கள் (09-1-2016) சனிக்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/GWxW6p

இன்றைய நாள் எப்படி? 09.01.2016 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 09.01.2016 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம், மார்கழி மாதம் 24ம் தேதி, ரபியுல் அவ்வல் 28ம் தேதி. *09.01.2016 சனிக்கிழமை, தேய்பிறை.சதுர்த்தசி திதி காலை 08:28 வரை, அதன்பின் அமாவாசை திதி. மூலம் நட்சத்திரம் காலை 10:49 வரை, அதன்பின் பூராடம் நட்சத்திரம், சித்தயோகம். மேலும் படிக்க:http://goo.gl/nLELC6

Wednesday 6 January 2016

சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா

சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக ருசியான உணவு தரும் ருருபைரவா வருக சந்தோஷம் தரும் சம்கார பைரவா வருக பித்தம் போக்கும் பீஷண பைரவா வருக மேலும் படிக்க:http://goo.gl/JYUcXm

பரிகார பைரவர் - கபால பைரவர்

இன்றைய நாள் எப்படி? 07.01.2016 தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய நாள் எப்படி? 07.01.2016 தமிழ் பஞ்சாங்கம் இன்று ! *மன்மத வருடம், மார்கழி மாதம் 22ம் தேதி, ரபியுல் அவ்வல் 26ம் தேதி. *07.01.2016 வியாழக்கிழமை, தேய்பிறை.துவாதசி திதி காலை 07:38 வரை, அதன்பின் திரயோதசி திதி. அனுஷம் நட்சத்திரம் காலை 08:57 வரை, அதன்பின் கேட்டை நட்சத்திரம் மேலும் படிக்க:http://goo.gl/OHVMT6

இன்றைய ராசிபலன்கள் (07-1-2016)

Tuesday 5 January 2016

இன்றைய நாள் எப்படி? 06.01.2016 தமிழ் பஞ்சாங்கம்

சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவ மந்திரங்கள்

சிவபெருமானின் அம்சத்துடன் நாய் வாகனத்தில் எழுந்தருளி அருள் பாலிப்பவர் பைரவர். பொதுவாக மக்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது பொருளாதார சிக்கல்களால் தான். நீங்களும் பொருளாதார சிக்கலில் சிக்கி அவதியுறுபவரா? அப்படியென்றால் , நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் சொர்ண ஆகர்ஷண பைரவர்.இவரை தேய்பிறை அஷ்டமியிலும் , ராகு காலம் சனி ஓரையுலும் தரிசிப்பது நல்ல பலன் தரும்.மேலும், சகல தோஷ நிவர்த்திக்கு சொர்ண ஆகர்ஷன பைரவருக்கு வடை மாலை சாத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அத்துடன், இவருக்கு நைவேத்தியமாக தயிர்சாதம் படைத்து வழிபடுவதும் சிறப்பு.அடுத்து வரும்..... மேலும் படிக்க::http://goo.gl/9eTbmK

இன்றைய ராசிபலன்கள் (06-1-2016)

புதன்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/LSOzQC

Monday 4 January 2016

இன்றைய நாள் எப்படி? 05.01.2016 தமிழ் பஞ்சாங்கம்

இன்று ! *மன்மத வருடம் மார்கழி மாதம் 20ம் தேதி, ரபியுல் அவ்வல் 24 ம் தேதி *05.01.2016 செவ்வாய்க்கிழமை. தேய்பிறை ஏகாதசி திதி நாள் முழுவதும், விசாகம் நட்சத்திரம் நாள் முழுவதும் மேலும் படிக்க:http://goo.gl/AiogZy

இன்றைய ராசிபலன்கள் (05-1-2016)

செவ்வாய்க்கிழமை மேலும் படிக்க:http://goo.gl/5WzqIw